12ம் வகுப்பு தமிழ் அணிகள் இலக்கணம் & சான்றுடன் கூடிய விளக்கம் | 12th Tamil Anigal Ilakkanam

12ம் வகுப்பு தமிழ் அணிகள் இலக்கணம் & சான்றுடன் கூடிய விளக்கம்
12ம் வகுப்பு தமிழ் அணிகள் இலக்கணம் & சான்றுடன் கூடிய விளக்கம்

1 : பொருள் வேற்றுமை அணி

பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :
செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
சான்று :

" ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னே ரிலாத தமிழ். "

( தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் )

சான்று விளக்கம் :
கதிரவன்தமிழ்
உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றுகிறது.பொதிகை மலையிலிருந்து தோன்றுகிறது.
கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளைப் போக்குகிறது.உலகில் வாழும் மக்களின் அறியாமை என்னும் இருளைப் போக்குகிறது.
ஒளிர்கின்ற கதிரவனாக இருக்கிறது.தனக்கு நிகரில்லாத தமிழாக இருக்கிறது.
அணி பொருத்தம் :
கதிரவனுக்கும், தமிழுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை கூறி, பின் அவற்றுள் தமிழ் தன்னிகரில்லாதது என வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.

2 : நிரல்நிறை அணி

நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும், அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்.

சான்று :

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

( திருக்குறள் )

சான்று விளக்கம் :

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

அணி பொருத்தம் :

இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது.

எனவே, இக்குறட்பாவில் நிரல்நிறை அணி பயின்று வந்துள்ளது.

3 : ஏகதேச உருவக அணி

ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :

செய்யுளில் கவிஞர் தாம் கூறும் இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

சான்று :

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

( திருக்குறள் )

சான்று விளக்கம் :

சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் சுற்றத்தையும் அழித்துவிடும்.

அணி பொருத்தம் :

சினத்தை நெருப்பாகவும், இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த வள்ளுவர், உலக வாழ்க்கையைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டார்.

எனவே, இது ஏகதேச உருவக அணி ஆயிற்று.

4 : தொழில் உவமை அணி

தொழில் உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :

செய்யுளில், ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

சான்று :

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

( திருக்குறள் )

சான்று விளக்கம் :

மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும், நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல நின்று பழகுதல் வேண்டும்.

அணி பொருத்தம் :

இக்குறட்பாவில், தீக்காய்தல் என்னும் செயல் (தொழில்), அரசரோடு பழகுவதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, இது தொழில் உவமை அணி ஆயிற்று.

5 : உவமை அணி

உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :

உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

சான்று :

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

( திருக்குறள் )

சான்று விளக்கம் :

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன் வாழ்தல் போன்றது.

அணி பொருத்தம் :
உவமைகுடங்கருள் பாம்போடு உடனுறைதல்
உவமேயம்உடம்பாடு இலாதவர் வாழ்க்கை
உவம உருபுஅற்று

இக்குறட்ட்பாவில், உவமை ஒரு தொடராகவும் மற்றும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு அற்று வெளிப்படையாக வந்துள்ளது.

எனவே, இது உவமை அணி ஆயிற்று.

6 : எடுத்துக்காட்டு உவமை அணி

எடுத்துக்காட்டு உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :

செய்யுளில், உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.

சான்று :

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

( திருக்குறள் )

சான்று விளக்கம் :

உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், (அதுபோல) கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

அணி பொருத்தம் :
உவமைதுஞ்சினார் செத்தாரின் வேறல்லர்
உவமேயம்கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்
உவம உருபு(அதுபோல) மறைந்து வந்துள்ளது

இக்குறட்ட்பாவில், உவமை ஒரு தொடராகவும் மற்றும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு அதுபோல மறைந்து வந்துள்ளது.

எனவே, இது எடுத்துக்காட்டு உவமை அணி ஆயிற்று.

7 : சொற்பொருள் பின்வருநிலையணி

சொற்பொருள் பின்வருநிலையணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :

செய்யுளில், முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளை தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

சான்று 1 :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

( திருக்குறள் )

சான்று 1 விளக்கம் :

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

அணி பொருத்தம் :

இக்குறட்ட்பாவில், " பொருள் " என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து " கருத்து " என்ற ஒரே பொருளை தருகிறது.

எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று.

சான்று 2 :

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

( திருக்குறள் )

சான்று 2 விளக்கம் :

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

அணி பொருத்தம் :

இக்குறட்ட்பாவில், " எண்ணிய " என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து " நினைத்த " என்ற ஒரே பொருளை தருகிறது.

எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று.

Previous Post Next Post