உள்ளடக்க விவரம் | |
---|---|
வகுப்பு | பத்தாம் வகுப்பு |
பாடம் | தமிழ் |
இயல் | 1 - அமுத ஊற்று |
பகுதி | 1.5 - எழுத்து, சொல் |
கற்பவை கற்றபின்
1
தேன், நூல், பை, மலர், வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.
- தேன் - தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
- நூல் - நூல் பல கல்.
- பை - பை நிறைய பணம் இருந்தது.
- மலர் - மலர் பறித்து வந்தேன்.
- வா - விரைந்து வா.
2
வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
காண், சிரி, படி, தடு
எ.கா: காண் – காட்சி, காணுதல், காணல், காணாமை
- சிரி - சிரிப்பு, சிரித்தல், சிரிக்காமை
- படி - படிப்பு, படித்தல், படிக்காமை
- தடு - தடுப்பு, தடுத்தல், தடுக்காமை
3
தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.
அண்ணன் | எங்கே செல்கிறாய் ? (தொடர்மொழி) |
---|---|
தம்பி | ___________________ (தனிமொழி) |
அண்ணன் | __________________ வாங்குகிறாய்? (தொடர்மொழி) |
தம்பி | ___________________ (தொடர்மொழி) |
அண்ணன் | __________________ (தனிமொழி) |
தம்பி | ___________________ (தொடர்மொழி) |
அண்ணன் | ___________________ |
தம்பி | ___________________ |
அண்ணன் | எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி) |
---|---|
தம்பி | கடைக்கு (தனிமொழி) |
அண்ணன் | இப்பொழுது என்ன வாங்குகிறாய்? (தொடர்மொழி) |
தம்பி | பருப்பு வாங்குகிறேன். (தொடர்மொழி) |
அண்ணன் | எதற்கு? (தனிமொழி) |
தம்பி | பருப்பு சோறு செய்ய அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் (தொடர்மொழி) |
அண்ணன் | இன்று பருப்பு சோறு வேண்டாமென்று அம்மாவிடம் சொல்வோம் (தொடர்மொழி) |
தம்பி | சரி இன்று அம்மாவைப் பிரியாணி செய்து தரச்சொல்வோம். (தொடர்மொழி) |
4
மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.
இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.
- அழைக்கும் - அழைத்தல்
- ஏறுவேன் - ஏறுதல்
- அமர்வேன் - அமர்தல்
- பார்ப்பேன் - பார்த்தல்
- எய்தும் - எய்தல்
5
கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.
- கட்டு : முதனிலைத் தொழிற்பெயர்
- சொட்டு : முதனிலைத் தொழிற்பெயர்
- வழிபாடு : விகுதி பெற்ற தொழிற்பெயர்
- கேடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- கோறல் : விகுதி பெற்ற தொழிற்பெயர்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1
" கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது " - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
அ) பாடிய, கேட்டவர்ஆ) பாடல், பாடியஇ) கேட்டவர், பாடியஈ) பாடல், கேட்டவர்
குறுவினா
1
" வேங்கை " என்பதைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும் (தனிமொழி)
வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தருகிறது (தொடர்மொழி)
2
" உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் " – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.
- உடுப்பதூஉம் உண்பதூஉம் : இன்னிசை அளபெடை வந்துள்ளது.
- செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.
சிறுவினா
1
" அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது "
இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
தொழிற்பெயர் | எதிர்மறை தொழிற்பெயர் |
---|---|
அறிதல் | அறியாமை |
புரிதல் | புரியாமை |
தெரிதல் | தெரியாமை |
பிறத்தல் | பிறவாமை |
கூடுதல் வினாக்கள்
விரைவில் பதிவிடப்படும்