12th Tamil Unit 1 Section 1.1 (இளந்தமிழே) Text Book Solutions

உள்ளடக்க விவரம்

உள்ளடக்க விவரம்

வகுப்பு12ம் வகுப்பு
பாடம்தமிழ்
இயல்1
பிரிவு1.1 - இளந்தமிழே (செய்யுள்)

பாடப்புத்தக குறிப்புகள்

1 - இலக்கணக் குறிப்பு

இலக்கணக் குறிப்பு

  • செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் - பண்புத்தொகைகள்
  • முத்து முத்தாய் - அடுக்குத்தொடர்
  • சிவந்து - வினையெச்சம்
  • வியர்வை வெள்ளம் - உருவகம்

2 - உறுப்பிலக்கணம்

உறுப்பிலக்கணம்

சாய்ப்பான்
  • சாய் + ப் + ப் + ஆன்
  • சாய் - பகுதி
  • ப் - சந்தி
  • ப் - எதிர்கால இடைநிலை
  • ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
வியந்து
  • விய + த் (ந்) + த் + உ
  • விய - பகுதி
  • த் (ந்) - சந்தி, 'ந்' ஆனது விகாரம்
  • த் - இறந்தகால இடைநிலை
  • உ - வினையெச்ச விகுதி
விம்முகின்ற
  • விம்மு + கின்று + அ
  • விம்மு - பகுதி
  • கின்று - நிகழ்கால இடைநிலை
  • அ - பெயரெச்ச விகுதி
இருந்தாய்
  • இரு + த் (ந்) + த் + ஆய்
  • இரு - பகுதி
  • த் (ந்) - சந்தி, 'ந்' ஆனது விகாரம்
  • த் - இறந்தகால இடைநிலை
  • ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

3 - புணர்ச்சி விதி

புணர்ச்சி விதி

செம்பரிதி

  • செம்பரிதி = செம்மை + பரிதி
  • ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + பரிதி என்பது செம்பரிதி எனப் புணர்ந்தது.

வானமெல்லாம்

  • வானமெல்லாம் = வானம் + எல்லாம்
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + எ = மெ) வானெமல்லாம் எனப் புணர்ந்தது.

உன்னையல்லால்

  • உன்னையல்லால் = உன்னை + அல்லால்
  • இஈஐ வழி யவ்வும் என்ற விதிப்படி, உன்னை + ய் + அல்லால் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ய் + அ = ய) உன்னையல்லால் எனப் புணர்ந்தது.

செந்தமிழே

  • செந்தமிழே = செம்மை + தமிழே
  • ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + தமிழே என்றானது.
  • முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, (ம் திரிந்து ந் தோன்றி), செந்தமிழே எனப் புணர்ந்தது.

கற்பவை கற்றபின்

1

தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறுவதன் நோக்கம் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கலந்துரையாடல் நிகழ்த்துக.

வேதன்எனக்கு மொழி வாழ்த்து வைப்பு முறையைப் பற்றிய ஒரு விளக்கம் தேவை.
மதன்சொல்லுங்க! மொழி வாழ்த்து வைப்பு முறையில் என்ன விளக்கம் வேண்டும் ?
வேதன்இப்போதெல்லாம் இறைவாழ்த்து இருந்த இடத்தில் மொழி வாழ்த்து வைக்கப்படுகிறதே, அதுதான்.
மதன்அது இடமாற்றம் இல்லை . ஒதுக்கப்படுவதும் இல்லை .
வேதன்நேற்று போல் இன்று இல்லை என்கிறீர்களா ?
மதன்அதாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்விருப்பதெய்வங்களைவணங்கிவிட்டுத் தொடங்குவதுதான் வழக்கம்.
வேதன்தற்போது புத்தகங்களில் அப்படி இல்லையே.
மதன்வணங்குவது வேறு, இடம் பெறவில்லை என்பது வேறு. இது மொழிப்புத்தகம். எனவே, மொழியைத் தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
வேதன்மொழி தெய்வத்தை எவ்வாறு வணங்கலாம் ?
மதன்மொழி தெய்வத்தைப் பல புலவர்கள் பலவாறு போற்றியுள்ளனர். பாரதிதாசன் தமிழை என்னுயிர் என்பேன் என்பார்.
வேதன்அப்போ, மொழிப்பாடங்களில் மொழிக் கடவு(ளை)ள் வாழ்த்தை வைப்பது சரிதானா ?
மதன்நிச்சயமாக, மொழி வளம், மொழி சிறக்க, மொழி தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதால் மொழி வாழ்த்தினை இடம் பெறச் செய்வது சாலச்சிறந்தது.
வேதன்நன்றி மதன்.
மதன்நன்றி வேதன், மீண்டும் சந்திப்போம்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1

"மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

  • க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
  • உ) பொதிகையில் தோன்றியது
  • ங) வள்ளல்களைத் தந்தது
அ) க மட்டும் சரிஆ) க, உ இரண்டும் சரிஇ) ந மட்டும் சரிஈ) க, ங இரண்டும் சரி

ஈ) க, ங இரண்டும் சரி

குறுவினா

1

கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.

சிறுவினா

1

"செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

  • கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
  • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
  • கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

2

பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வலு வலு கால வகையி னானே

மீண்டும் அந்த பழமைநலம் புதுக்கு தற்கு

மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே ! கூவி வா, வா !

- நன்னூல்- சிற்பி பாலசுப்ரமணியம்
நன்னூல்சிற்பி பாலசுப்ரமணியம்
பழையவற்றை ஒதுக்கி புதியவற்றை புகுத்த வேண்டும்.பழைய செயல்பாடுகளுக்கு புதிய வடிவம் கொடுக்க வேண்டும்.
தேவையற்ற சொல், பொருள், வழக்கம் எல்லாம் கால மாறுதலுக்கு ஏற்ப புதிய சொல், பொருள், வழக்கம் தேவை.தமிழ்த்தாயின் பழமைமிகு செயல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து தமிழ்க்குயிலே மெய்சிலிர்க்குமாறு பாட வா.

நெடுவினா

1

தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.

  • செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
  • உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது.
  • இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
  • தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
  • பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.
Previous Post Next Post