உள்ளடக்க விவரம்
உள்ளடக்க விவரம்
வகுப்பு | 12ம் வகுப்பு |
---|---|
பாடம் | தமிழ் |
இயல் | 1 |
பிரிவு | 1.1 - இளந்தமிழே (செய்யுள்) |
பாடப்புத்தக குறிப்புகள்
1 - இலக்கணக் குறிப்பு
இலக்கணக் குறிப்பு
- செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் - பண்புத்தொகைகள்
- முத்து முத்தாய் - அடுக்குத்தொடர்
- சிவந்து - வினையெச்சம்
- வியர்வை வெள்ளம் - உருவகம்
2 - உறுப்பிலக்கணம்
உறுப்பிலக்கணம்
சாய்ப்பான் |
|
---|---|
வியந்து |
|
விம்முகின்ற |
|
இருந்தாய் |
|
3 - புணர்ச்சி விதி
புணர்ச்சி விதி
செம்பரிதி |
|
---|---|
வானமெல்லாம் |
|
உன்னையல்லால் |
|
செந்தமிழே |
|
கற்பவை கற்றபின்
1
தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறுவதன் நோக்கம் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கலந்துரையாடல் நிகழ்த்துக.
வேதன் | எனக்கு மொழி வாழ்த்து வைப்பு முறையைப் பற்றிய ஒரு விளக்கம் தேவை. |
---|---|
மதன் | சொல்லுங்க! மொழி வாழ்த்து வைப்பு முறையில் என்ன விளக்கம் வேண்டும் ? |
வேதன் | இப்போதெல்லாம் இறைவாழ்த்து இருந்த இடத்தில் மொழி வாழ்த்து வைக்கப்படுகிறதே, அதுதான். |
மதன் | அது இடமாற்றம் இல்லை . ஒதுக்கப்படுவதும் இல்லை . |
வேதன் | நேற்று போல் இன்று இல்லை என்கிறீர்களா ? |
மதன் | அதாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்விருப்பதெய்வங்களைவணங்கிவிட்டுத் தொடங்குவதுதான் வழக்கம். |
வேதன் | தற்போது புத்தகங்களில் அப்படி இல்லையே. |
மதன் | வணங்குவது வேறு, இடம் பெறவில்லை என்பது வேறு. இது மொழிப்புத்தகம். எனவே, மொழியைத் தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. |
வேதன் | மொழி தெய்வத்தை எவ்வாறு வணங்கலாம் ? |
மதன் | மொழி தெய்வத்தைப் பல புலவர்கள் பலவாறு போற்றியுள்ளனர். பாரதிதாசன் தமிழை என்னுயிர் என்பேன் என்பார். |
வேதன் | அப்போ, மொழிப்பாடங்களில் மொழிக் கடவு(ளை)ள் வாழ்த்தை வைப்பது சரிதானா ? |
மதன் | நிச்சயமாக, மொழி வளம், மொழி சிறக்க, மொழி தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதால் மொழி வாழ்த்தினை இடம் பெறச் செய்வது சாலச்சிறந்தது. |
வேதன் | நன்றி மதன். |
மதன் | நன்றி வேதன், மீண்டும் சந்திப்போம். |
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1
"மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
- க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
- உ) பொதிகையில் தோன்றியது
- ங) வள்ளல்களைத் தந்தது
ஈ) க, ங இரண்டும் சரி
குறுவினா
1
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?
செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.
சிறுவினா
1
"செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
- கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
- ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
- கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.
2
பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வலு வலு கால வகையி னானே | மீண்டும் அந்த பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே ! கூவி வா, வா ! |
- நன்னூல் | - சிற்பி பாலசுப்ரமணியம் |
நன்னூல் | சிற்பி பாலசுப்ரமணியம் |
---|---|
பழையவற்றை ஒதுக்கி புதியவற்றை புகுத்த வேண்டும். | பழைய செயல்பாடுகளுக்கு புதிய வடிவம் கொடுக்க வேண்டும். |
தேவையற்ற சொல், பொருள், வழக்கம் எல்லாம் கால மாறுதலுக்கு ஏற்ப புதிய சொல், பொருள், வழக்கம் தேவை. | தமிழ்த்தாயின் பழமைமிகு செயல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து தமிழ்க்குயிலே மெய்சிலிர்க்குமாறு பாட வா. |
நெடுவினா
1
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.
- செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
- உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது.
- இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
- பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
- தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
- பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
- உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
- கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
- குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.